Saturday, November 2, 2013

பேசன் லாடு / கடலைமாவு உருண்டை

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இந்த வட இந்திய இனிப்பை நாம் மிகவும் எளிதாய் செய்யலாம். தீபாவளி என்பதால் சற்றே ஆரோக்கியத்தை பின்னே தள்ளிவிட்டு, லாடுவின் செய்முறையை கொடுத்துள்ளேன். அடுத்த பதிவு கண்டிப்பாக மிகவும் ஆரோக்கியமான ஒன்றாக இருக்கும். பேசன் லாடுவின் செய்முறையை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

1. கடலைமாவு - 4 கப்
2. சர்க்கரை - 2 கப்
3. நெய் - 1 கப்
3. ஏலக்காய்த்தூள் -  சிறிது 
4. முந்திரி & உலர்ந்த திராட்சை - 1/2 கப் 




செய்முறை :

1.  ஒரு வாணலியில் கடலை மாவை மிதமான தீயில் நன்கு வாசனை வரும் வரை கட்டியில்லாமல் வறுக்கவும்.

2. உருக்கிய நெய்யை ஊற்றி, கட்டியில்லாமல் கிளறி அடுப்பை அணைக்கவும்.

3. முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். 

4. ஏலக்காய்த்தூள், முந்திரி, உலர்ந்த திராட்சை மற்றும் சர்க்கரையை கடலைமாவுடன் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.

5. மாவு கலவை கை பொறுக்கும் சூட்டிற்கு வந்தவுடன், சிறு உருண்டைகளாக பிடிக்கவும்.

6. காற்று புகாத டப்பாவில் வைக்கவும்.

பின்குறிப்பு :

லாடு செய்வதற்கு என்று கடைகளில், கடலைமாவு கொரகொரவென்று கிடைக்கும். எப்பொழுதும் வாங்கும் கடலைமாவில் செய்ய விரும்பினால், சிறிது ரவை(சூஜி) சேர்த்து செய்யவும்.

3 comments:

  1. செய்து பார்ப்போம்... செய்முறைக்கு நன்றி...

    குடும்பத்தார், சுற்றத்தார், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. கண்டிப்பாக செய்து பாருங்கள் தனபாலன் சார்..அருமையாய் இருக்கும். தீபாவளி வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
  3. கடலை மாவுலாடு நெய் மண மணக்க சூப்பர்.

    ReplyDelete

நண்பர்களே! தங்கள் கருத்துகளும், ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. பின்னூட்டம் இடும் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றிகள்.